×

போலீஸ்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு

 

திருவொற்றியூர், நவ. 6: திருவொற்றியூர், விம்கோ நகர், அம்பேத்கர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன்(61). இவரது மனைவி பெயர் ரமாதாயி. இவர்களது மகன் கவியரசன்(32), மருமகள் பேச்சியம்மாள்(31) ஆகிய இருவரும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வீட்டின் கீழ் தளத்தில் செல்லப்பாண்டியனும், முதல் மாடியில் கவியரசனும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லப்பாண்டியன் தனது வீட்டுக் கதவின் உள் தாழ்ப்பாளை பூட்டாமல் மறந்து தூங்கியுள்ளார்.

இதை பார்த்த மர்ம நபர்கள் நள்ளிரவில் செல்லப்பாண்டியன் வீட்டிற்குள் புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம், பூஜை அறை உண்டியலில் இருந்த பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்லப்பாண்டியன் எண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் வீட்டில் நகை, பணம் திருடு போன இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போலீஸ்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Chellappandian ,4th Street, Ambedkar Nagar, Vimco Nagar, Tiruvottiyur ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...